தமிழக செய்திகள்

ஈரோடு மாநகரில் ஒரே நாளில் 13 பாம்புகள் பிடிபட்டன

ஈரோடு மாநகரில் ஒரே நாளில் 13 பாம்புகள் பிடிபட்டன.

ஈரோடு சூரம்பட்டி வலசு, திண்டல் வித்யா நகர், பொன்னிநகர், மாணிக்கம்பாளையம், பூந்துறை ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று ஒரே நாளில் 13 பாம்புகள் பிடிபட்டன. பிடிபட்ட பாம்புகள் அனைத்தும் ஈரோடு ரோஜாநகரில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த பாம்புகள் அனைத்தும் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.