தமிழக செய்திகள்

காமயகவுண்டன்பட்டியில் சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கம்பம் அருகே சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு வருமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்

தினத்தந்தி

கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2010-ம் ஆண்டு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 12 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் கட்டிடம் பாழடைந்து போகும் நிலை உள்ளது. எனவே சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு வருமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர். கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் வாஸ்து சரி இல்லை என கூறி கட்டிடத்தை திறக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர் என்று பொதுமக்கள் கூறினர். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு