தமிழக செய்திகள்

குலசேகரன்பட்டினத்தில்ஆக்கிரமிப்பிலிருந்து வீடுகள் அகற்றம்

குலசேகரன்பட்டினத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து வீடுகள் அகற்றப்பட்டது.

தினத்தந்தி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் சவேரியார் கோயில் தெருவை சேர்ந்த பண்டாரம், ராணி ஆகியோர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். நேற்று காலையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை ஊழியர்கள் அங்கு வந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வீடுகளில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து குலசேகரன்பட்டினம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் அவர்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளிலிருந்து வெளியேறினர். தொடர்ந்து அந்த வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை