தமிழக செய்திகள்

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை: தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கிகளை விற்ற - மத்தியபிரதேச வியாபாரி கைது

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கள்ளத்துப்பாக்கிகளை தமிழகத்தில் விற்பனை செய்த மத்திய பிரதேச மாநில வியாபாரி கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சென்னை,

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கள்ளத்துப்பாக்கிகள் குஜராத் மாநிலத்தின் வழியாக கடத்திவரப்பட்டு, தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் டி.ஜி.பி. ஜாபர்ஷேட் உத்தரவின் பேரில் ஐ.ஜி. சங்கர் மேற்பார்வையில், சூப்பிரண்டு ரெங்கராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் தமிழகத்தில் மட்டும், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 12 கள்ளத்துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னை நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த போலீஸ்காரர் பரமேஸ்வரன் (வயது34), அவரது உறவினர் நாகராஜ் (30), தஞ்சை பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவா (32), நெல்லையை சேர்ந்த எட்டப்பன், கலைசேகர், திவ்யபிரபாகரன், கலைமணி ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 6 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்