தமிழக செய்திகள்

கடந்த 44 நாட்களில் மெரினா, பெசண்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் நீரில் மூழ்கி 13 பேர் உயிரிழப்பு

கடந்த 44 நாட்களில் சென்னையின் மெரினா, பெசண்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதியிலிருந்து கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், ஆகஸ்ட் 23-ம் தேதியில் இருந்து அக்டோபர் 6-ம் தேதி( அதாவது இன்று வரை) சென்னையின் மெரினா, பெசண்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 23-ம் தேதி பள்ளி மாணவர்கள் 3 பேரும், 27-ம் தேதி பள்ளி மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

* செப்டம்பர் 2-ம் தேதியில் 11-ம் வகுப்பு மாணவர் அக்பர் என்பவரும், 3-ம் தேதியில் கல்லூரி மாணவர் சுஷாந்த் எனபவரும் உயிரிழந்துள்ளனர். 25-ம் தேதி கல்லூரி மாணவர்கள், சைலேஷ்பாபு மற்றும் பிரனீத் குமார் ஆகிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

* அக்டோபர் 1,2,4, 5-ம் தேதிகளில் கல்லூரி மாணவர்கள் 3 பேரும் மற்றும் இரு வெளிமாநில தொழிலாளர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்