தமிழக செய்திகள்

புதிதாக தோண்டப்படும் குழியில் பாறை மற்றும் மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய தீயணைப்பு வீரர் இறங்கினார்!

புதிதாக தோண்டப்பட்டுள்ள குழிக்குள் இறங்கி மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய ஏணி மூலம் தீயணைப்புப்படை வீரர் உள்ளே இறங்கினார்!

சென்னை,

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 67 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. நடுக்காட்டுப்பட்டியில் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் லேசான மழை பெய்து வருகிறது.

திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

ஆழ்துளை கிணறு அருகே 45 அடி வரை தோண்டப்பட்ட பள்ளத்தில் தீயணைப்பு படை வீரர் இறங்கினார். ஏணி மூலம் இறங்கிய வீரர் பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

குழந்தை மீட்புப்பணி நடக்கும் இடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆய்வு செய்தார். மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...