தமிழக செய்திகள்

டெண்டர் வழக்கில் உயர்நீதிமன்றம் எந்த முறைகேடும் நடந்திருப்பதாக குறிப்பிடப்படவில்லை - முதல்வர் பழனிசாமி

டெண்டர் வழக்கில் உயர்நீதிமன்றம் எந்த முறைகேடும் நடந்திருப்பதாக குறிப்பிடப்படவில்லை என புதுக்கோட்டையில் முதல்வர் பழனிசாமி கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திருமண விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசும் போது தொண்டர்களின் துணையோடு எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை முறியடித்து மக்களுக்கு தெடர்ந்து சேவை செய்வேம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது உயர்நீதிமன்ற தீர்ப்பில் சாலை அமைப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக குறிப்பிடப்படவில்லை. என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை அருகே கருவேப்பிலையான் பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் காயம் அடைந்த முருகேசன் என்பவரை தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் .