தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் கனமழையுடன் சூறாவளி காற்று வீசி 70 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன

திருவண்ணாமலையில் கனமழையுடன் சூறாவளி காற்று வீசியதில் 70 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன.

திருவண்ணாமலை,

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலையில் ஆரணி அருகே கனமழையுடன் சூறாவளி காற்று வீசியது.

இதில் 70 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன. மகசூலுக்கு தயாராக இருந்த நிலையில் சூறாவளி காற்றால் வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.