தமிழக செய்திகள்

போடியில் பழைய இரும்பு கடையில் திருட்டு

போடியில் பழை இரும்பு கடைக்குள் புகுந்து மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

தினத்தந்தி

போடியில், மூணாறு செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை பின்புறம் அம்மாக்குளம் பகுதியை சேர்ந்த சையது என்பவர் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். நேற்று இரவு இவர், கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று மதியம் 12 மணி அளவில் அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் ஹார்டு டிஸ்க் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.10 ஆயிரம் திருடு போய் இருந்தது. இதுகுறித்து சையது போடி நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை