தமிழக செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் 87.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

திருவாரூர் மாவட்டத்தில் 87.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

தினத்தந்தி

பிளஸ்-1 பொதுத்தேர்வில் திருவாரூர் மாவட்டத்தில் 87.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

87.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், ஆதிதிராவிடர், நகராட்சி, உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 227 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 468 மாணவர்கள், 7 ஆயிரத்து 389 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 857 பேர் தேர்வு எழுதினர்.

தமிழகத்தில் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 168 மாணவர்கள், 6 ஆயிரத்து 894 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 62 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 79.90 சதவீதமும், மாணவிகள் 93.30 சதவீதம் என மொத்தம் 87.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்