தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

கன்னியாகுமரி மாவட்டம் பத்தனாபுரத்தை சேர்ந்தவர் ஜாண்ரோஸ். இவரது மகன் பிரதீப் (வயது 32). இவர் தூத்துக்குடியில் உள்ள நண்பர்களை பார்ப்பதற்காக அடிக்கடி வந்து செல்வாராம். இவர் நேற்று முன் தினம் இரவு சிதம்பரநகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜான்ரோசை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த பிரதீப், ரத்தம் வடிந்த நிலையில் நடந்து சென்று அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு