தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் உப்பள சம்மேளன நிர்வாகிகள் நியமனக் கூட்டம்

தூத்துக்குடியில் உப்பள சம்மேளன நிர்வாகிகள் நியமனக் கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு தேசிய உப்பள சம்மேளனம் நிர்வாகிகள் நியமனக்கூட்டம் தூத்துக்குடி ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் மாநில தலைவராக ஏ.முடிசூடி, செயலாளராக சே.அமிர்த ஜான் பிரிட்டோ, பொருளாளராக எம்.சூலான் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான நியமன கடிதங்களை தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஐ.என்.டி.யு.சி மாநில பொதுச் செயலாளர் பி.ராஜ், கவுன்சிலர் சந்திரபோஸ், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், ஆரோக்கியம், மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT