தமிழக செய்திகள்

வேதாரண்யத்தில், 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் வேதாரண்யத்தில் நேற்று 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

தினத்தந்தி

வேதாரண்யம்:

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் வேதாரண்யத்தில் நேற்று 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் மணிக்கு 45 கி.மீ இருந்து 65 கி.மீ வரை சூறைக்காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து மீன்வளத்துறை, மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

அதன்பேரில் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையில் இருந்து சற்று தொலைவில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி கிடந்தது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு