தமிழக செய்திகள்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - கல்லூரி கல்வி இயக்குனரகம் தகவல்

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 300 இடங்கள் உள்ளன. இதில், நடப்பாண்டில் ஆகஸ்டு 1-ந்தேதி வரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 224 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இதில் 45 ஆயிரத்து 965 மாணவர்களும், 56 ஆயிரத்து 259 மாணவிகளும் அடங்குவர். மேலும் 9 ஆயிரத்து 76 இடங்கள் காலியாக உள்ளன. ஒட்டுமொத்த அளவில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு பள்ளியில் படித்த 27 ஆயிரத்து 775 மாணவர்கள் புதுமை பெண் திட்டத்தின் மூலம் நிதி உதவி பெறவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து