சென்னை,
பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாலும், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கான பால் பணப்பட்டுவாடா பாதிக்காத வகையிலும், பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பதப்படுத்தல்-போக்குவரத்து-அலுவலக செலவுகள் உயர்ந்துள்ள நிலையில் அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த விலை உயர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
2014-ம் ஆண்டு கடைசியாக ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது. இந்தநிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆவின் பால் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்றே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அரசு அறிவித்தாலும், பால் விலை உயர்வுக்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக இல்லத்தரசிகள் பொங்கி எழுந்துள்ளனர்.
பால் விலை உயர்வு குறித்த இல்லத்தரசிகளின் கருத்து விவரம் வருமாறு:-