தமிழக செய்திகள்

130 கோடி இந்தியர்களின் பங்களிப்பினால் மட்டுமே இந்தியாவை மகத்தான தேசமாக உருவாக்க முடியும் பிரதமர் மோடி பேச்சு

130 கோடி இந்தியர்களின் பங்களிப்பினால் மட்டுமே இந்தியாவை மகத்தான தேசமாக உருவாக்க முடியும் என்று பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் பேசினார்.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழா மற்றும் சிங்கப்பூர்-இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.