கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

கடலூரில் இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி: ஜனவரி 4-ந்தேதி தொடங்குகிறது

பேரணி தளத்திற்கு வரும் பங்கேற்பாளர்கள், 18 வகையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

சென்னை தலைமையக ஆட்சேர்ப்பு மண்டலத்தின் கீழ், இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி, கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.

பேரணி தளத்திற்கு வரும் பங்கேற்பாளர்கள், ஹால்டிக்கெட், கல்வி சான்று, போலீஸ் நன்னடத்தை சான்று, இருப்பிட சான்று, சாதி சான்று, ஆதார்கார்டு, பான் கார்டு, விளையாட்டு சான்று, என்.சி.சி. சான்று உள்பட 18 வகையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் பங்கேற்க வேண்டும்.

ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி தொடர்பான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்