தமிழக செய்திகள்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

வடக்குமாங்குடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது

மெலட்டூர்;

அம்மாப்பேட்டை ஒன்றியம், வடக்குமாங்குடி ஊராட்சி, பெருங்கரை கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் கலைச்செல்விகனகராஜ் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர் சவுந்தரராஜன், கால்நடை உதவியாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் 50- க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர். முகாமில் வடக்குமாங்குடி, பெருங்கரை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை வடக்குமாங்குடி ஊராட்சிமன்றம் மற்றும் கால்நடைதுறையினர் செய்து இருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்