தமிழக செய்திகள்

கார் மோதி தொழிலாளி படுகாயம்

தினத்தந்தி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள ஜிட்டாண்ட அள்ளியை சேர்ந்தவர் ராஜப்பன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை ஜிட்டாண்டஅள்ளியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பஞ்சப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கூலிகானூர் அருகே சென்றபோது எதிரே வந்த சொகுசு கார் மோட்டர்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜப்பனை 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா