தமிழக செய்திகள்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனி செயலாளர் வெங்கட்ரமணன் ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனி செயலாளர் வெங்கட்ரமணன் ஆஜரானார். #Jayalalithaa | #InquiryCommission #Jayalalithaadeath

தினத்தந்தி

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதி விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.

சென்னை எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள் மற்றும் அவரின் உதவியாளர்கள், உறவினர் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் தனி செயலாளராக இருந்த வெங்கட் ரமணன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. அவர் இன்று காலையில் ஆஜராகி நீதிபதி ஆறுமுக சாமி கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது ஆஸ்பத்திரியில் சென்று பார்த்தீர்களா? அவர் முதல்வராக இருந்த போது சிகிச்சைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் பதில் அளித்தார்.அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை ஆணையத்தில் ஆஜரான பின், ஜெயலலிதாவின் தனிச்செயலராக இருந்த வெங்கட்ரமணன் பேட்டி அளித்தார் அப்போது ஆணையம் முன் மீண்டும் ஆஜராக வேண்டியிருக்கும் என சொல்லியிருக்கிறார்கள்; கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். என கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை