தமிழக செய்திகள்

புதுப்பட்டு ஊராட்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

புதுப்பட்டு ஊராட்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

காவேரிப்பாக்கம்

புதுப்பட்டு ஊராட்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டு ஊராட்சியில் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் 2021-22-ம் ஆண்டின் வளர்ச்சி திட்ட பணிகளின்கீழ் நெற்களம் அமைத்தல், சிமெண்ட் சாலை அமைத்தல், அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முகமது சைபுதீன், தண்டாயுதபாணி, தலைவர் சுந்தரம், துணை தலைவர் அசோக், ஊராட்சி செயலாளர் ரமேஷ், உள்பட பலர் உடன் இருந்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்