தமிழக செய்திகள்

ஜல்ஜீவன் திட்டத்தில் பொருத்தப்பட்ட குடிநீர் அளவீடு மீட்டரை திருடிய 5 பேர் கைது

ஜல்ஜீவன் திட்டத்தில் பொருத்தப்பட்ட குடிநீர் அளவீடு மீட்டர்களை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

ராஜபாளையம் சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் போடி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளில் கடந்த ஒரு வருடமாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் அளவீடு மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் போடி குலாளர்பாளையம் பகுதியில் உள்ள போஜராஜ் தெருவில் சுமார் 27 குடிநீர் அளவீடு மீட்டர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பித்தளையால் ஆன பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து மணிகண்டன் போடி நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அதை திருடியது, போடி தேவர் காலனியை சேர்ந்த தேசிகன் (21), வேல்முருகன் (43) உள்பட 5 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து