தமிழக செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு வட்டியில்லாமல் ரூ.5 லட்சம் கடன் வழங்க வேண்டும் -விக்கிரமராஜா

சாத்தான்குளத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேற்று நிவாரண பொருட்களை வழங்கினார்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

சாத்தான்குளத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேற்று நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்குவது போன்று வியாபாரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சிறிய பெட்டிக்கடையில் இருந்து சூப்பர் மார்க்கெட் வரையிலான கடைகளும் வெள்ளத்தில் சேதமடைந்து பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு மத்திய அரசு முத்ரா திட்டத்தின் கீழ் வட்டியில்லா கடனாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு