தமிழக செய்திகள்

சென்னை அருகே ரூ.301 கோடியில் சர்வதேச விளையாட்டு நகரம்

விளையாட்டு நகரத்துக்கு அனுமதி அளித்து தமிழக அரசு நேற்று அரசாணையை வெளியிட்டது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை அருகே செம்மஞ்சேரியில் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனை செயல்படுத்தும் வகையில் விளையாட்டு நகரத்துக்கு அனுமதி அளித்து தமிழக அரசு நேற்று அரசாணையை வெளியிட்டது.

இதன்படி செம்மஞ்சேரியில் 112.12 ஏக்கர் பரப்பளவில் ரூ.301 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமான விளையாட்டு நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முதற்கட்டமாக ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நீர் விளையாட்டுகள், கால்பந்து மைதானம், ரோலர் ஸ்கேட்டிங், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, சைக்கிளிங், தடகளத்துக்கான ஓடுதளம், பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து