தமிழக செய்திகள்

கூட்டணியில் வைகோ இருக்கிறாரா என்பதை திமுகவில் இருப்பவர்களே உறுதி செய்யவில்லை - தமிழிசை சௌந்தரராஜன்

கூட்டணியில் வைகோ இருக்கிறாரா என்பதை திமுகவில் இருப்பவர்களே உறுதி செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் செய்தியார்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும், அவர்களது கோரிக்கைகளை முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும். கஜா புயல் பாதித்த இடங்களில் நிவாரண பணிகள் நடைபெறுவதால் 20 தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவது சந்தேகம்.

திமுகவுடன் இன்று இருப்பவர்கள் தொடர்ந்து இருப்பார்களா என்ற சந்தேகம் இருக்கிறது. பிரதமர் மோடியின் அதிகாரத்தை பறிக்க நினைக்கும் வைகோவின் எண்ணம் கனவில் கூட நிறைவேறாது. கூட்டணியில் வைகோ இருக்கிறாரா என்பதை திமுகவில் இருப்பவர்களே உறுதி செய்யவில்லை.

பிரதமர் மோடியை அரசியல் நாகரீகமின்றி வைகோ ஒருமையில் விமர்சித்தது கண்டிக்கத்தக்கது பாஜக பலமான கூட்டணி அமைக்கும். திமுக கூட்டணி பலமாக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...