தமிழக செய்திகள்

பவானிசாகர் அருகே அட்டகாசம் செய்து வரும்காட்டு யானையை தேடும் பணி தீவிரம்

பவானிசாகர் அருகே அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தினத்தந்தி

பவானிசாகர்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியும், பயிர்களை சேதப்படுத்தியும் வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த யானையை பிடிக்க ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று வனத்துறையினர் விளாமுண்டி வனப்பகுதியில் அடர்ந்த வனத்துக்குள் 10 கிலோமீட்டர் தூரம் சென்று அட்டகாசம் செய்து வரும் யானையை தேடினார்கள். ஆனால் அந்த யானையை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அந்த யானையை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்