தமிழக செய்திகள்

இ-பதிவு மூலமாக திருமணத்துக்கு செல்ல அனுமதி இல்லை

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல கட்டங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

இதன் ஒரு கட்டமாக வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கும் இ-பதிவு கட்டாயம் என அரசு அறிவித்தது.அதன்படி திருமணம், மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த காரியங்களுக்காக இ-பதிவு மூலம் பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் தற்போது இ-பதிவு நடைமுறைகளில் இருந்து திருமணம் எனும் காரணம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது.

இதன்மூலம் இ-பதிவு மூலமாக திருமணத்துக்கு செல்வதற்காக பொதுமக்கள் பதிவு செய்யமுடியாது. கடந்த ஆண்டில் இ-பதிவு நடைமுறையில் இருந்தபோது திருமணத்துக்கு செல்வதற்காக அனுமதி தரப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இ-பதிவு நடைமுறையில் இருந்து திருமணம் எனும் காரண குறிப்பு நீக்கப்பட்டு இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது