தமிழக செய்திகள்

கவர்னர்களை குறைவாக மதிப்பிட்டு பேசுவது நல்லதல்ல" - கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை செலுத்தினார்.

தினத்தந்தி

சென்னை,

மாநில அரசுகள் கவர்னர்களை குறைத்து மதிப்பிடுவது நல்லது அல்ல என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

அண்ணல் அம்பேத்கரின் 132 பிறந்த நாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேசிய அவர், கல்வி, சமூகம் ஆகியவை எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையை உருவாக்கியவர் அம்பேத்கர் என புகழாரம் சூட்டினார்.

மேலும் ஆளுநர்களை குறைவாக மதிப்பிட்டு பேசுவது நல்லதல்ல எனவும் தமிழிசை தெரிவித்தார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்