தமிழக செய்திகள்

சென்னையில் இரவு முழுவதும் பெய்த மழை

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்தது.

தினத்தந்தி

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வந்தது.

நேற்று பிற்பகல் வரை நகரின் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், அதன்பிறகு சற்று இடைவெளி விட்டு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்று இரவு வரை பல இடங்களில் நீடித்தது.

குறிப்பாக பெசன்ட்நகர், அடையாறு, கிண்டி, சைதாப்பேட்டை உள்பட நகரின் முக்கிய இடங்களிலும், புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்பட பல பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

இந்த மழை இன்று (புதன்கிழமை) காலை வரை நீடிக்கும் என்றும், அதன்பிறகு சற்று இடைவெளி விட்டு மீண்டும் மழை தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை