சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று புகழேந்தி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, வருமான வரித்துறை ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், செல்வ வரி, வருமான வரி பாக்கிக்காக ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீடு, ஐதராபாத் பங்களா உள்ளிட்ட சில சொத்துகளை முடக்கியுள்ளதாக கூறியிருந்தது.