சென்னை
சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார் அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
பேரவையில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என தமிழில் கூறினார். கவர்னர் வருவாய் குறைந்த போதிலும் தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிறது. கடைசி மீனவரை மீட்கும்வரை மீட்ப் பணியை மத்திய அரசு தொடர்கிறது.
* ஜெயலலிதா வகுத்துத்தந்த பாதையில் தமிழக அரசு வழுவாது செயல்பட்டு வருகிறது.
* சட்டம், ஒழுங்கை பாதுகாக்க இந்த அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது
* ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தை பட்ஜெட்டில் அரசு அறிமுகப்படுத்தும்
* ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தீவிரம்.
* பட்டா மாறுதல் உட்பட இணையதளம் வழியிலான அரசு பணிகள் மக்களுக்கு பயனளிக்கிறது.
* கவர்னர் உரை முக்கிய அம்சங்கள் :சட்டம், ஒழுங்கை பாதுகாக்க இந்த அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
* ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது.
* 5 ஆண்டுகளில் 300 இ-சேவை மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
* கச்சத்தீவை மீட்க மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது; மீனவர் பிரச்சினை தீர கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு.
* தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஓரளவு குறைந்துள்ளது.
* செழிப்புமிக்க தமிழ்நாட்டை உருவாக்குவதே ஜெயலலிதாவின் கனவு; இந்த கொள்கையின் அடிப்படையில் முதலமைச்சர் பழனிசாமி அரசும் செயல்பட்டு வருகிறது.
* மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும். இந்த திட்டத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்க உலகவங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
#TNGovernor | #TNAssembly | #BanwarilalPurohit