தமிழக செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களுடன் கமல்ஹாசன் நேர்காணல்; காணொலி காட்சி மூலம் நடத்தினார்

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணும் பணி நாளை நடக்க உள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களுடன் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் பேசி வருகிறார்.

தினத்தந்தி

வேட்பாளர்களின் தேர்தல் அனுபவங்கள், மக்களிடம் அவர்களுக்கு கிடைத்த வரவேற்பு, அவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் ஆகியவற்றை கேட்டு வருகிறார். ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் கருத்துகளை உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.

இதுவரை, விழுப்புரம், திருச்சி, மதுரை, கோவை மண்டலங்களை சேர்ந்த 65 வேட்பாளர்களிடம் கமல்ஹாசன் கருத்து கேட்டு உள்ளார். தொடர்ந்து வேட்பாளர்களிடம் கருத்துகளை கேட்டு வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து