தமிழக செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேர் சீரமைக்கும் பணி மும்முரம்...!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

தினத்தந்தி

காஞ்சிபுரம்,

உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 13-ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

இவ்விழாவின் முக்கிய உற்சவமான தேர் திருவிழா வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பிரம்மோற்சவம் நடப்பதால் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் காந்திரோட்டில் நிலை கொண்டுள்ள தேரின் சக்கரம், ஹைட்ராலிக் பிரேக் நல்ல நிலையில் உள்ளதா போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் 73 அடி உயரமுள்ள தேரை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.

வரதராஜ பெருமாள் கோவிலில் 2 ஆண்டுகள் பிறகு நடைபெறும் தேர் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை