தமிழக செய்திகள்

கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை விற்ற பழ வியாபாரி கைது

நாட்டறம்பள்ளி அருகே கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை விற்ற பழ வியாபாரி கைது செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை விற்ற பழ வியாபாரி கைது செய்யப்பட்டார்.

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி அருகே பையனப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்

அப்போது பையனப்பள்ளி பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்த கமல் (வயது 38) என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அதில் அவர் வீட்டின் பின்புறம் கர்நாடக மாநில 150 மது பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 மதுபாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு