தமிழக செய்திகள்

கருணாநிதி நூற்றாண்டு கொடியேற்று விழா

சுரண்டையில் கருணாநிதி நூற்றாண்டு கொடியேற்று விழா நடந்தது.

சுரண்டை:

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சுரண்டையில் 5 இடங்களில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி அப்துல் காதர், அவைத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகசாமி, முன்னாள் நகர செயலாளர் பூல்பாண்டியன், ஸ்டீபன் சத்யராஜ், அரசு ஒப்பந்தக்காரர் கரையாளனூர் சண்முகவேலு, சாமுவேல் மனோகர், ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவி வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் கணேசன், இளைஞர் அணி முல்லை கண்ணன், கோமதிநாயகம், சசிகுமார் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு