தமிழக செய்திகள்

ஒரு கோடி பக்கங்களுக்கு மேல் தன் கைகளால் எழுதியவர்: “உலகின் 8-வது அதிசயம் கருணாநிதி” ஜெகத்ரட்சகன் புகழாரம்

ஒரு கோடி பக்கங்களுக்கு மேல் தன் கைகளால் எழுதியவர் என்றும், உலகின் 8-வது அதிசயம் கருணாநிதி என்றும் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை,

மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், அவரை நினைவு கூர்ந்து முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-