தமிழக செய்திகள்

கொரோனாவில் இருந்து கருணாஸ் எம்.எல்.ஏ. குணமடைந்தார்

கொரோனாவில் இருந்து கருணாஸ் எம்.எல்.ஏ. குணமடைந்துள்ளார்.

சென்னை,

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எனது தொகுதி மேம்பாட்டு பணிகளிலும், கொரோனா விழிப்புணர்வு மற்றும் நிவாரண பணிகளில் கலந்து கொண்டதன் விளைவால் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கடந்த 6-ந்தேதி சென்னை கிங்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். அரசு டாக்டர்கள், நர்சுகள் என்னை ஆக்கப்பூர்வமாக கவனித்தனர். தற்போது, கொரோனா இல்லாமல் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளேன். எனக்கு உதவிய டாக்டர்கள், நர்சுகள், உடல்நிலை குறித்து விசாரித்த முதல்-அமைச்சர், மத்திய சுகாதாரத்துறை மந்திரி, மாநில சுகாதாரத்துறை அமைச்சர், எனக்காக பிரார்த்தனை செய்த எனது தொகுதி மக்களுக்கும் மற்றும் அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்