தமிழக செய்திகள்

திருவொற்றியூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி கியாஸ் ஏஜென்சி ஊழியர் பலி

திருவொற்றியூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி கியாஸ் ஏஜென்சி ஊழியர் பலியானார்.

தினத்தந்தி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). இவர், மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள தனியார் கியாஸ் சிலிண்டர் ஏஜென்சியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் திருவொற்றியூர் ராஜாஜி நகருக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பினார்.

திருவொற்றியூர் அண்ணாமலை ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் சரவணன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை