தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரி சிறுமி கொலை செய்தி அதிர்ச்சியளிக்கிறது: நயினார் நாகேந்திரன்

’காமவெறி பிடித்த மிருகங்களை வளர்த்துவிடும் அறிவாலயம்’ என கடும் விமர்சனங்களை நயினார் நாகேந்திரன் முன்வைத்துள்ளார்.

சென்னை,

கிருஷ்ணகிரி சிறுமி கொலை செய்தி அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”காமவெறி பிடித்த மிருகங்களை வளர்த்துவிடும் அறிவாலயம்!

கிருஷ்ணகிரியில் 2 வயதே ஆன பெண் குழந்தையைத் திமுகவின் இளைஞரணி கிளைச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

ஆட்சி அரியணை ஏறிய ஐந்தாண்டுகளில், "திமுககாரன்" எனும் அடைமொழி வழங்கி, ஆளுங்கட்சி கர்வத்தை ஊட்டி வளர்த்து, பச்சிளம் குழந்தையைக் கூட விட்டுவைக்காமல், பாலியல் இச்சையில் வேட்டையாடும் கொடூர மிருகங்களை வளர்த்துவிடும் கூடாரமாகவே மாறிவிட்ட திமுக ஆட்சி ஒழிந்தால் மட்டுமே தமிழகத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும்!”

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.