தமிழக செய்திகள்

ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

தினத்தந்தி

ஆம்பூர் தாலுகா கீழ்கன்றாம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி முனீஸ்வரி (வயது 40). கர்ப்பிணியான இவர் பிரசவத்துக்காக வெங்கடசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆம்புலன்ஸை டிரைவர் சிதம்பரம் ஓட்டினார். ஊசூர் அருகே சென்றபோது அவருக்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனே ஆம்புலன்சை நிறித்தி மருத்துவ உதவியாளர் சார்லஸ் பிரசவம் பார்த்தார். முனீஸ்வரிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து