தமிழக செய்திகள்

ஏப்ரல் 25-ந் தேதி குன்றத்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு தகவல்

குன்றத்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

காஞ்சிபுரம்,

பிரசித்தி பெற்ற குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடமுழுக்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபத்திற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி குன்றத்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை