ஆலங்குடி:
ஆலங்குடி படேல் நகரில் வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.