கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

திருச்சியில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு தாராநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). சுமை தூக்கும் தொழிலாளி. இந்த நிலையில் நேற்று இரவு காந்தி மார்க்கெட் பகுதியில் டீ சாப்பிடுவதற்காக சுரேஷ் சென்றார். அப்போது அங்கு வந்த அவரது மைத்துனர் சந்திரகுமாருக்கும் (52), சுரேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

அப்போது சந்திரகுமார் கத்தியால் சுரேசை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்துவிட்டு, சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து காந்திமார்க்கெட் போலீசார் சந்திரகுமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து