தமிழக செய்திகள்

கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டையில் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பட்டுக்கோட்டை:

இ-பைலிங் முறையை உடனடியாக வாபஸ் பெறக்கோரி சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டை வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வக்கீல்கள் கோர்ட்டு வாசலில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்கத் தலைவர் மாஸ்கோ தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோவிந்தராஜ், துரைராசு,செல்வராஜ், அறிவழகன், சுசித்ரா, சுமதி, உஷா, பிரபாகரன், லட்சுமணன், ஜீவானந்தம், கருப்பையன் உள்பட 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து