தமிழக செய்திகள்

கொடைக்கானலில் ரூ.2¼ கோடியில் எல்.இ.டி. மின்விளக்குகள் அமைக்கும் பணி

கொடைக்கானலில் ரூ.2¼ கோடியில் எல்.இ.டி. மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

கொடைக்கானல் நகர் பகுதியில் நகராட்சி சார்பில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர் மழையால் மின்விளக்குகள் அவ்வப்போது பழுதடைந்து வருகின்றன. இதனால் பழைய மின்விளக்குகளை அகற்றி மின்சாரத்தை சேமிக்கும் எல்.இ.டி. மின்விளக்குகளை பொருத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. மேலும் புதிய இடங்களையும் தேர்வு செய்து மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுலா இடங்களில் ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 1,918 எல்.இ.டி. மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது.

இதையொட்டி எல்.இ.டி. மின்விளக்குகள் அமைக்கும் பணி தொடக்க விழா, கொடைக்கானல் ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்றது. இதில், நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மின்விளக்குகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர். விழாவில் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், கவுன்சிலர் சுப்பிரமணிய பால்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்