தமிழக செய்திகள்

சட்ட விழிப்புணர்வு முகாம்

கோத்தகிரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் உத்தரவின் படி, கோத்தகிரி ஓரசோலை அருகே உள்ள ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோத்தகிரியில் உள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வனிதா தலைமை தாங்கி பேசும்போது, வழக்குகளை நேரடியாக கோர்ட்டு முறையில் இல்லாமல் மாற்று முறையில் தீர்வு காண ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இலவச சட்ட உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நீதிமன்றம் செல்லாமல் சமரச தீர்வு ஏற்படுத்துவது, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் பற்றி தெரிந்துகொள்ள சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது, அரசின் பல்வேறு சான்றிதழ்களை பெற்றுத் தருவது, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அவர்களுக்கு உரிய நீதி பெற்றுத் தருவது போன்ற உதவிகளை செய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் சட்ட உதவி மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இதையடுத்து முதியோர்களிடம் இருந்து 3 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் வக்கீல்கள் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். முடிவில் சட்ட மைய அலுவலர் கெஜலட்சுமி நன்றி கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு