தமிழக செய்திகள்

சட்ட விழிப்புணர்வு முகாம்

சிவகிரி அருகே சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

சிவகிரி:

சிவகிரி நீதிமன்றம் சார்பில் சிவகிரி அருகே உள்ள தலையணை பகுதியில் குடியிருக்கும் மழைவாழ் மக்களுக்காக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான கே.எல்.பிரியங்கா தலைமை தாங்கி பேசுகையில், ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இலவச சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. உங்களுடைய சட்டம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத்தில் நேரில் வந்து மனு எழுதித்தரலாம். சில பிரச்சினைகளை வழக்குகள் மூலமாகத்தான் தீர்வு காண முடியும். உங்கள் சார்பில் வாதாட இலவசமாக வழக்கறிஞர் நியமிக்கப்படுவார். அனைவரும் சட்ட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், என்றார்.

தொடர்ந்து அரசு பழங்குடியினர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். இதில் வக்கீல் செந்தில் திருமலைக்குமார், வனவர் குமார், நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்