தமிழக செய்திகள்

சேலம் கோர்ட்டில்போலீஸ் உதவி கமிஷனரை மிரட்டிய ஆயுள் தண்டனை கைதி மீது வழக்கு

சேலம் கோர்ட்டில் போலீஸ் உதவி கமிஷனரை மிரட்டிய ஆயுள் தண்டனை கைதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

சேலம

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக டெனிபா, சிலம்பரசன், திருநாவுக்கரசு, ஜீசஸ் உள்பட 8 பேரை கிச்சிப்பாளையம் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அப்போது 8 பேரின் உறவினர்களும் கோர்ட்டில் திரண்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்திவிட்டு 8 பேரையும் போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர். இதில் திருநாவுக்கரசு என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உதவி கமிஷனர் ராமமூர்த்தியை மிரட்டியதுடன் தகாத வார்த்தையால் பேசினார். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரர் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் திருநாவுக்கரசு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்