நெல்லை சிவந்திப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கிருஷ்ணாபுரம் பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 40) என்பதும், அவர் அந்த பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்று கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.