தமிழக செய்திகள்

மன்னார்குடியில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்

பங்குனி பெருவிழாவை முன்னிட்டு மன்னார்குடியில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்

தினத்தந்தி

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

மன்னார்குடி தாலுகா ராஜகோபாலசாமி திருக்கோவிலில் நடைபெறும் பங்குனிப்பெருவிழாவை முன்னிட்டு 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெட்டுங்குதிரை மண்டகப்படி மற்றும் 27-ந் தேதி (திங்கட்கிழமை) திருத்தேர் சுவாமி வீதியுலா ஆகியவை நடக்கிறது. இதையொட்டி மன்னார்குடி நகரப்பகுதிகளில் செயல்படும் 9606, 9607, 9610, 9605, 9725, 9613 மற்றும் 9860 ஆகிய டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனை சார்ந்துள்ள மதுக்கூடங்களையும் 26, 27-ந்தேதி ஆகிய 2 நாட்களுக்கு முழுவதுமாக மூட வேண்டும். 9854 மற்றும் 9616 ஆகிய 2 மதுபானக்கடைகள் மற்றும் அதனை சார்ந்து செயல்படும் மதுக்கூடங்களை 26-ந்தேதி மதியம் 2 மணி முதல் மூட வேண்டும். மேற்கண்ட உத்தரவை செயல்படுத்த தவறும் பட்சத்தில், தொடர்புடைய மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் மதுகூடங்களின் ஏலதாரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை